வாத்துகறி குழம்பு

தேவையானப் பொருட்கள்:
வாத்துகறி - 1 கிலோ,
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 2,
நீளவாக்கில் அரிந்த தக்காளி - 2,
கீறிய பச்சை மிளகாய் - 10,
மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்,
முழுப்பூண்டு - 2,
பிரியாணி இலை - 4,
புளிக்கரைசல் - 2 கப்,
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
வடகம் - 1 டேபிள் ஸ்பூன்,
சீரகம் - 1 டீ ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
வாத்தை மஞ்சள்தூள் சேர்த்து சுத்தம் செய்யவும். புளிக்கரைசலில் உரித்த முழுப்பூண்டு பற்கள், மஞ்சள்தூள் சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும். ஃபகடாயில் எண்ணெய் விட்டு வடகத்தைப் பொரித்து தனியாக வைத்து, அதே எண்ணெயில் தேங்காயையும் பொன்னிறமாக வறுக்கவும். வடகம்-தேங்காய் மைய அரைத்து கடைசியாக சீரகம் சேர்த்து அரைத்தெடுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பிரியாணி இலையைப் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகுத்தூள் என ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும். வதங்கியதும் புளிக்கரைசலோடு இருக்கும் கறியை ஊற்றி கொதிக்கவிடவும். கறி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
சிக்கன் மக்ரோனி

தேவையானப் பொருட்கள்:
மக்ரோனி - 150 கிராம்,
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ,
வெங்காயம் - 2,
தக்காளி - 1,
கறிவேப்பிலை - 1 கொத்து,
பச்சைமிளகாய் - 2,
இஞ்சி, பூண்டு விழுது - 3 டீ ஸ்பூன்,
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்,
சீரகத்தூள் - 1/2 டீ ஸ்பூன்,
பட்டை, ஏலக்காய், கிராம்பு(வாசனைத்தூள்) - 1/2 டீ ஸ்பூன்,
சிக்கன் மசாலா தூள் - 1 டீ ஸ்பூன்,
தனியா தூள் - 1/2 டீ ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
நெய் - 4 டீ ஸ்பூன்
செய்முறை:
மக்ரோனியை உப்பு சேர்த்து அவித்து தண்ணீர் வடித்துக்கொள்ளவும். வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, பிரிஞ்சி சேர்க்கவும். பின்னர் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக கிளறவும். அதில் தக்காளி, பின்னர் எல்லாத்தூள்களையும் தயிர் சேர்த்து வதக்கவும். எண்ணெய் மேலே வந்ததும் சிக்கனை சேர்த்து நன்கு வேகவிடவும். சிக்கன் வெந்ததும் வேக வைத்த மக்ரோனியை சேர்த்து மசாலாவில் உள்ள நீர் வற்ற கிளறி பின் இறக்கவும்.
தூத் மக்கன்வாலா

தேவையானப் பொருட்கள்:
பனீர் - 1\4 கிலோ,
வெங்காயம் - 200 கிராம்,
தக்காளி - 200 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1\2 டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
காய்ந்த வெந்தய இலை - 1\4 டீஸ்பூன்,
கருப்பு உப்பு - 1\4 டீஸ்பூன்,
தயிர் - 1 கப்,
வெண்ணெய் - 50 கிராம்,
பாலாடை - 4 டீஸ்பூன்
செய்முறை:
பனீரை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரைத்து, வெண்ணெயில் ஒவ்வொன்றாக வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுதும் சேர்த்து வதக்கவும். மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாதூள் சேர்த்து வதக்கவும். வெந்தய இலை, தயிர் சேர்க்கவும். ஓரளவு கொதித்ததும் பனீர் துண்டுகள் சேர்க்கவும். விருப்பப்பட்டால் சிகப்பு கலர் சேர்க்கலாம். நன்றாகக் கொதித்ததும், பாலாடை சேர்த்து, பச்சை வெங்காயம், தக்காளி மற்றும் எலுமிச்சை பழ வில்லைகளுடன் பரிமாறவும்.